சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மூன்றாவது மீளாய்வு தொடர்பான விவாதங்கள்நேற்றைய தினம் (22) வெற்றிகரமாக நிறைவடைந்தன.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், IMF ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர் தலைமையில் மூத்த தூதரகத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவின் தலைவராக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இருந்தார்.
இதற்கமைய சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான மூன்றாவது மீளாய்வு தொடர்பான விவாதங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்தன.