இன மத பேதமற்ற நல்லாட்சி : பாராளுமன்றில் ஜனாதிபதி

இலங்கையில் இனவாத அரசியல் மற்றும் மத தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வியாழன் அன்று 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் உரையாற்றிய போது சபதம் எடுத்தார். அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வழங்கிய அவர், ஆட்சியில் ஒற்றுமை மற்றும் பொறுப்புணர்வின் முக்கியத்துவத்தை விளக்கினார்.


" NPP க்கு வாக்களித்தார்களா இல்லையா என்பதல்ல, அனைத்து குடிமக்களும் இந்த அரசாங்கத்தின் கீழ் சமமாக இருக்கிறார்கள்" என்று ஜனாதிபதி தெரிவித்தார். "இந்த நாட்டில் உள்ள மக்களின் தேவைகள் மற்றும் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம்."

இலங்கையில் இன மற்றும் மத மோதல்கள் ஏற்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டார். “இந்த வகையான பிளவுகளுக்காக நாங்கள் போதுமான இரத்தத்தையும் கண்ணீரையும் செலவிட்டுள்ளோம். எதிர்கால சந்ததியினர் இந்த சண்டையில் இருந்து விடுபடுவதை உறுதி செய்வது நமது பொறுப்பாகும்” என்றார்.

ஜனாதிபதி கூறியதாவது பொருளாதாரம்,ஜனநாயகம், என்று பல வகையில் இருக்கலாம். ஆனால் இனி எவரும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத போராட்டங்களை முன்னெடுக்க இடமளியோம் என்று உறுதியளிக்கிறேன்.. "நாங்கள் பொருளாதார மற்றும் ஜனநாயக விவாதங்களில் ஈடுபடலாம், ஆனால் இனவாதம் மற்றும் தீவிரவாதம் இந்நாட்டில் இனி இடம் பெறாது" என்றார்.

இலங்கை மக்களின் நீண்டகால கனவான ஐக்கிய தேசத்தை உருவாக்குவதற்காக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உழைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். நமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் மாற்றத்தின் புதிய யுகம் ஆரம்பித்துள்ளது. இந்த புதிய யுகத்தின் வெற்றிக்கு இந்த பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் பணியாற்றியிருக்கலாம். நாம் எதிர்மறையான கொள்கைகள் இருக்கலாம், கருத்து வேறுபாடுகள் மற்றும் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் இன்று நாம் அனைவரும் ஒரே இலக்கை நோக்கு செல்ல ஒன்றுபட்டுள்ளோம்.

மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் சிறந்த நாட்டை உருவாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. அந்த பொறுப்புக்கு நானும் எங்கள் அரசும் கட்டுப்பட்டுள்ளோம். இதற்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும், எம்.பி.க்களும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்.

இறுதியாக, மார்ட்டின் லூதர் கிங் ஒருமுறை சொன்னார், “இருளை இருளால் விரட்ட முடியாது. ஒளியால் மட்டுமே அதைச் செய்ய முடியும். வெறுப்பால் வெறுப்பை ஒழிக்க முடியாது. அன்பால் மட்டுமே அதைச் செய்ய முடியும்" எனக் கூறி அவர் தனது உரையை முடித்தார்.

Previous Post Next Post