வெளிநாடு சென்ற யாழ் இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில்: உறவினர்கள் கதறல்

வெளிநாட்டு முகவர் மூலம் சட்டப்படி சுற்றுலா விசாவில் ஜெர்மன் பிரான்ஸ் பெல்ஜியம் போன்ற நாடுகளில் கொண்டு சென்று விடுவோம் என்ற வார்த்தையை நம்பி சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

TubeTamil24x7

இதில் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞரின் தாய் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்போது, தமது ஊரை சேர்ந்த ஒருவரின் மூலம்  அவரை நம்பியே மகனை வெளிநாட்டுக்கு அனுப்பியதாகவும் அவரே தனது மகனுக்கு முழு பொறுப்பு என்றும் கூறியுள்ளார். ரஷ்ய விமான நிலையத்தில் இறங்கிய தமது பிள்ளைகளை ரஷ்ய இராணுவம் அழைத்துச் சென்றதாகவும் ஒரு வாரம் ஒரு அறையில் தங்க வைத்ததாகவும் பின்னர் ராணுவ பயிற்சி முகாமிற்கு அழைத்துச் சென்று பயிற்சி வழங்கியதாகவும் கூறியுள்ளார். 

குறிப்பிட்ட முகவரிடம் ஏன் எமது பிள்ளைகளை ராணுவ அழைத்துச் செல்கின்றது என உறவினர்கள்  வினவிய போது ஒரு சான்றிதழ் பெற வேண்டி உள்ளதாகவும் அதன் பின்னர் அவர்கள் வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என கூறியதாகவும் அறிய முடிகிறது. அத்துடன் முழு பணத்தையும் கொடுத்தால் தான் அவர்களை வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்க முடியும் என்ற வார்த்தையை நம்பி உறவினர்கள் முழு பணத்தையும் கொடுத்து விட்டதாக அறிய முடிகிறது.

TubeTamil24x7

ஆனால் அவர்கள் வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படாமல் ரஷ்யா இராணுவத்தால் போர் பயிற்சிகள் வழங்கப்பட்டு உக்கரைன்  போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஒரு இளைஞர் தனது தாய்க்கு அனுப்பிய மூன்று குரல் பதிவுகளில் கூறியுள்ளார். அந்த குரல் பதிவுகள் கேட்பவர்களின் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது. அந்த குரல் பதிவில் மேலும் அவர்

" அம்மாச்சி கடைசியாக இந்த மெசேஜ் ஒன்று போடுறேன், நான் ஒரு வருஷம் ஒன்றும் செய்ய இயலாது என்னால.. இவர்கள் கொண்டு வந்து மாட்டி விட்டுட்டாங்கள் போல தான் கிடக்கு.. ஒன்றும் செய்ய இயலாது என்ற கட்டத்தில் தான்  நிக்ரம் போல..  ஆனால் ஒரு வருஷத்துல உயிரோட இருந்தால் அம்மா கட்டாயம் உனக்காக வருவேன்..  நீ ஒன்றும் யோசிக்காத ஒரு வருஷத்துல உயிரோட இருந்தால் கட்டாயம் வருவேன்.. கடவுள் மேல எடுக்கிறானோ இல்லையோ தெரியல பார்ப்போம் என்ன நடக்குது என்று..  எங்களுக்கு எல்லாமே புதுசு சண்டை தொடங்குற போல இருக்கு..  பயமா கிடக்கு.. ஒன்றும் செய்ய இயலாது என்றால் என்ன செய்கிறது.. என்னை பற்றி யோசிக்காத அழாதீங்க சாப்பிடுங்க.. சந்தோசமாய் இருங்க.. கவலைப்படாதீங்க ..பாய்..  லவ் யூ " என்றும் "உங்கள சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று தான் வெளிநாடு வந்த நான்.. " எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக உறவினர்கள் முகவரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஒரு வருடம் ராணுவத்தில் இணைவதாக ஒரு படிவத்தில் கையொப்பமிட்டு விட்டார்கள் அதனால் ஒன்றும் செய்ய இயலாது எனவும் கூறியதாக அறிய முடிகிறது. 
இளைஞர்களை மீட்டுத் தருமாறு உறவினர்கள் கேட்கும்போது தகாத வார்த்தைகளை பிரயோகிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதியையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் வேண்டி நிற்கின்றனர் மேலும் இது தொடர்பான விடியோ பதிவை பார்வையிடவும். 


                                 நன்றிகள்: TubeTamil24x7


Previous Post Next Post