வடக்கில் 18 இந்திய மீனவர்கள் கைது

உரிய அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 18 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் வடக்குப் பகுதியில் கடந்த 2ஆம் திகதி திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

குறித்த மீன்பிடி படகு சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளது. இவர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதைக் கண்டறிந்த இலங்கை கடற்படையினர் கப்பலில் இருந்த 18 இந்திய மீனவர்களுடன் ஒரு இந்திய மீன்பிடி படகையும்  கைது செய்துள்ளனர்.

இந்திய மீனவர்களுடன் சிறைபிடிக்கப்பட்ட படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை கடலோர காவல்படை வடக்கு பிராந்திய பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post