பெங்கல் புயலால் இந்தியா மற்றும் இலங்கையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்

பெங்கால் சூறாவளி இந்தியா மற்றும் இலங்கையில் 19 பேரின் உயிர்களை பறித்தது. இதற்கிடையில் வங்காள விரிகுடாவை கடந்த சனிக்கிழமையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. புதுச்சேரியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. புயலால் சென்னையின் தெற்கு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சனிக்கிழமையில் நகரத்திலிருந்து விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஆனால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, பலத்த காற்று மற்றும் கனமழையின் காரணமாக சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களை மீட்க படகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் புதுச்சேரியில் இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்படுவதற்கிடையில், சென்னையில் மழை குறைந்துள்ளது. இலங்கையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் கனமழையால் 138,944 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.



Previous Post Next Post